ஆப்நகரம்

ரியல் எஸ்டேட் தொழிலை கடுமையாக முடக்கிய ரூபாய் நோட்டு தடை!

ரியல் எஸ்டேட் தொழிலை கடுமையாக முடக்கிய ரூபாய் நோட்டு தடை!

TNN 13 Jan 2017, 5:33 pm
சென்னை : வருடத்தின் இறுதி மாதங்களில் ரியல் எஸ்டேட் தொழில் எப்போது கொடி கட்டி பறக்கும். பண்டிகை நாட்கள், தீபாவளி போனஸ் என்று மக்கள் அதிக அளவில் நிலம் வாங்குவார்கள். ஆனால் இந்த வருடம் அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது. காரணம் மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை காரணமாக ரியல் எஸ்டேட் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil demonetisation slows down chennai real estate sales
ரியல் எஸ்டேட் தொழிலை கடுமையாக முடக்கிய ரூபாய் நோட்டு தடை!


2015ஆம் ஆண்டு 1673 யூனிட் நிலங்கள் விற்ற நிலையில் 2016ஆம் ஆண்டு 757 யூனிட் மட்டுமே விற்றுள்ளன. அதே போல் புதிய கட்டுமான பணிகள் 93இல் இருந்து 58ஆக குறைந்துள்ளன. ரூபாய் நோட்டு தடையை அடுத்து வர்தா புயல் தாக்கியதால் ரியல் எஸ்டேட் தொழில் மேலும் பாதிக்கப்பட்டதாக சென்னை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீதர் சீனிவாசன் கூறியுள்ளார்.

பெரிய பொருட்செலவில் கட்டப்படும் கட்டுமானப்பணிகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை. ஏனென்றால் செக் அல்லது கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை செய்து பணிகள் நடந்து வந்ததால் சிறிய அளவில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நடுத்தர மக்களின் வாழ்வும், அவர்கள் சார்ந்த தேவைகளும் வெகுவாக பாதித்தது. குறைந்த பொருட்செலவில் கட்டப்படும் கட்டிடப்பணிகள் வெகுவாக பாதித்தன. இவை இன்னும் ஆறு மாதங்களுக்கு மேல் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டில் 2015 உடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் ரியல் எஸ்டேட் புராஜெக்ட்களும், 21 சதவீதம் ஹவுசிங் யூனிட் பணிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி