ஆப்நகரம்

Dengue Fever: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சென்னையில் இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Oct 2018, 12:48 pm

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலில் மூன்று பெண்கள் மரணம்!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை- ராதாகிருஷ்ணன் பேட்டி

டெங்கு காய்ச்சல் பாதிப்பால், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள், இன்று சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர்.
Samayam Tamil dengue-fever-died-of-children
டெங்கு காய்ச்சல் பாதிப்பு: சென்னையில் இரட்டை குழந்தைகள் பலி


சென்னை அருகே மாதவரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் கஜலட்சுமி தம்பதிகளின் இரட்டை குழந்தைகளான தக்‌ஷன் மற்றும் தீக்‌ஷாவுக்கு கடந்த ஒருவாரம் மேலாக கடும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் காய்ச்சல் தொடர்ந்ததால், சந்தோஷ்குமார்-கஜலட்சுமி தம்பதிகள் தங்களது குழந்தைகளை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.




அங்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது, குழந்தைகள் இருவருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டது. மருத்துவர்கள், குழந்தைகளுக்கு தனி அறை ஒதுக்கி சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் தக்‌ஷன் மற்றும் தக்‌ஷிதா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது மரணம் மருத்துவமனை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நாகர்கோவிலை சேர்ந்த பேராசிரியையும் மற்றும் மதுரை சேர்ந்த 2 பேரும் சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி