ஆப்நகரம்

டெங்கு கொசுவை உற்பத்திசெய்த நிறுவனங்களிடம் இருந்து 1 கோடி வசூல் – அமைச்சா்

டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 1 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

TOI Contributor 12 Oct 2017, 9:30 pm
டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 1 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Samayam Tamil dengue rs 1 crore collected as fine from firms
டெங்கு கொசுவை உற்பத்திசெய்த நிறுவனங்களிடம் இருந்து 1 கோடி வசூல் – அமைச்சா்


டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சுமாா் 400 போ் பலியாகி உள்ளனர் என்று எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தொிவித்திருந்தாா். ஆனால் அரசோ 40 போ் உயிாிழந்துள்ளதாக அறிவித்தது.

மேலும் டெங்குவை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் உருவாவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தும் கடை, வணிக நிறுவனங்கள், கட்டிட உரிமையாளர்கள், காலிமனை உரிமையாளர்கள், வீட்டு உரிமையாளர்கள் என அனைவருக்கும் பொது சுகாதாரத்துறையின் தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எச்சரிக்கை நோட்டீசை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தண்டனை சட்டப்பிரிவில் இடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 1 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எய்ம்ஸ் மருத்துவர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

அடுத்த செய்தி