ஆப்நகரம்

திருச்சியிலும் டெங்குவா!!... தீவிரமாகும் டெங்கு பரவல்...

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது . இதுவரை தமிழகத்தின் மூன்று மாவட்டங்களுக்குமேல் ஆட்டம் காட்டிய டெங்கு காய்ச்சல் திருச்சி பக்கம் மட்டும் தலைகாட்டவே இல்லை.

Samayam Tamil 29 Sep 2019, 1:42 pm
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது . இதுவரை தமிழகத்தின் மூன்று மாவட்டங்களுக்குமேல் ஆட்டம் காட்டிய டெங்கு காய்ச்சல் திருச்சி பக்கம் மட்டும் தலைகாட்டவே இல்லை.
Samayam Tamil WhatsApp Image 2019-09-29 at 13.14.44.


இந்நிலையில், திருச்சி உறையூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

அதேசமயம், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு, காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக வந்த 104 நபர்களில், 17 குழந்தைகள் உட்பட, 27 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில், உறையூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் (பொ) ஹர்சியா பேகத்திடம் கேட்டபோது, "ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது உண்மை தான். அவருக்குரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவும், ரத்தப் பரிசோதனை செய்வதற்கான பிரத்தேக ஆய்வகமும், உடனுக்குடன் சிகிச்சை வழங்குவதற்கு மருத்துவ குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் வந்தால், பொதுமக்கள் தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது கூடாது. உடனுக்குடன் அரசு மருத்துவமனையை நாட வேண்டும்" என்றார்.

நாளுக்கு நாள் நோயின் பரவலும் தீவிரப்பட்டுக்கொண்டே இருக்கிறது.சுகாதாரத்துறை விரைந்து செயல்பட வேண்டியது அவசியம்...

அடுத்த செய்தி