ஆப்நகரம்

சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து ஸ்தம்பித்தது!

அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இதனால் போக்குவரத்து மிக கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.

TNN 30 Mar 2017, 10:46 am
சென்னை : அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இதனால் போக்குவரத்து மிக கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
Samayam Tamil dent near anna salai creates worst traffic situation
சென்னை அண்ணா சாலையில் திடீர் பள்ளம்.. போக்குவரத்து ஸ்தம்பித்தது!


சென்னை அண்ணாசாலையில், அமெரிக்க தூதரகம் மற்றும் சர்ச் பார்க் பள்ளிக்கும் இடையே சாலையின் நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் காலையில் வேளைக்கு செல்வோர் பெரும்பாலும் அண்ணாசாலையை பயன்படுத்துவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாதரணமாகவே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். தற்போது சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் மேலும் நெரிசல் அதிகமாக உள்ளது.



முதலில் இப்பள்ளம் ஏன் ஏற்பட்டது என தெரியாமல் இருந்தது. பின் மெட்ரோ ரயில் பணிகளின் போது சிமெண்ட் கலவை கசிவால் இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளத்தை சீர்செய்யும் பொருட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி