ஆப்நகரம்

ஒரே நேரத்தில் 2 புயல் சின்னம்? தாங்குமா தமிழகம்?

ஒரே சமயத்தில் வங்க கடலிலும், அரபிக் கடலிலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Nov 2021, 4:12 pm
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகமே தண்ணீரில் தத்தளித்து வருகிறது.
Samayam Tamil tn rains update


அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் முதல் வாரத்திலிருந்தே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகள் என்றில்லாமல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆந்திரா, கர்நாடகப் பகுதிகளிலும் கனமழை பெய்வதால் அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஏரிகள், குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. குடியிருப்புகளுக்குள் வெள்ளம் பாய்ந்து மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் தர்மபுரி கணக்கு: பழனியப்பனுக்கு புது அசைன்ட்மென்ட்!
இயல்பை விட பல மடங்கு அதிகமாக மழை பெய்து வருவதால் இந்த மழை எப்போது நிற்கும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வரும் நாள்களில் மழை அளவு படிப்படியாக குறையும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்திருந்தாலும் அடுத்தடுத்து கிளம்பும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே வங்கக்கடலில் நாளையும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதியும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ஆலோசனையில் தலைமைச் செயலாளர்!
அந்தமான் அருகே நாளை உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு -வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்: அப்போ அவ்வளவு தானா?
மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என்ற அறிவிப்பு மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி