ஆப்நகரம்

விவசாயத்திற்காக வைகை அணை திறப்பு !

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், இன்று வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக, நீர் திறக்கப்பட்டுள்ளது

TNN & Agencies 1 Nov 2017, 11:42 am
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், இன்று வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக, நீர் திறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil deputy chief minister o panneerselvam releases water from vaigai dam
விவசாயத்திற்காக வைகை அணை திறப்பு !


வடகிழக்கும் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வைகை அணை தற்போது நிரம்பி வருகிறது. இந்த நிலையில், வைகை அணையில் இருந்து விவசாயத்திற்காக இன்று நீர் திறக்கப்பட்டுள்ளது வைகை அணையில் இருந்து வரும் நீரால், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருக்கும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து வைத்தார்.இதன் மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், மதுரை விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

deputy chief minister o panneerselvam releases water from vaigai dam

அடுத்த செய்தி