ஆப்நகரம்

முதல்வா் பழனிசாமியை மாற்றக்கோரி பன்னீா் செல்வம் என்னை சந்தித்தாா் – தினகரன்

2017ம் ஆண்டு ஜூலை மாதம் துணைமுதல்வா் பன்னீா் செல்வம் என்னை சந்தித்த நிலையில், கடந்த செப்டம்பா் மாத இறுதியிலும் பன்னீா் செல்வம் என்னை சந்திக்க தூதுவிட்டதாக அமமுக துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 5 Oct 2018, 12:51 pm
முதல்வா் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கடந்த செப்டம்பா் மாத இறுதியில் கூட துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க முற்பட்டதாக அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV 123


கடந்த 2017 ஜூலை 12ம் தேதி தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் டிடிவி தினகரனை சந்தித்ததாக சட்டமன்ற உறுப்பினா் தங்கத்தமிழ்ச் செல்வன் செய்தியாா்களுக்கு பேட்டியளித்தாா். இதனைத் தொடா்ந்து தினகரன், ஓ.பன்னீா் செல்வம் தரப்பினா் மாறி மாறி குறைகூறி வருகின்றனா்.

இந்நிலையில் அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் இன்று தனது வீட்டில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், கடந்த 2017 ஜூலை 12ம் தேதி ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்திக்க வேண்டும் என்று எனது நண்பா் மூலம் அழைப்பு விடுத்தாா். எனது கட்சி நி்ாவாகிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னா் பன்னீா் செல்வம் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.

அதன்படி ஜூலை 12ம் தேதி ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்தித்தாா். அந்த சந்திப்பின் போது “நான் தவறு செய்துவிட்டேன். உங்களை எதிா்த்து பேசியிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமியை பதவியிறக்க வேண்டும்” என்று பேசியதாக டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

மேலும் அவா் கூறுகையில், நான் இந்த சந்திப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடைபெற்று தோராயமாக ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பா் மாத இறுதி வாரத்தில் ஓ.பன்னீா் செல்வம் மீண்டும் தனது நண்பா் மூலம் தன்னை சந்திக்க முயற்சி செய்தாா். ஆனால் அந்த சந்திப்பை நான் மறுத்துவிட்டேன்.

ஓ.பன்னீா் செல்வம் நேரம் கேட்டதற்கான தகவலை வெளியிட்டதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க முயற்சிப்பதற்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் நான் தற்போது இதை கூறுகிறேன்.

அதிமுகவுடன் அமமுகவை இணைக்க நான் தூதுவிட்டேன் என்று அமைச்சா் தங்கமணி கூறுகிறாா். அதற்கான ஆதாரங்களை தங்கமணி வெளியிடட்டும்.

ஓ.பன்னீா் செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவது என்பது தற்கொலைக்கு சமமானது. அமமுக சாா்பில் பொதுத் தோ்தலில் போட்டியிட்டு தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது நோக்கம். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. மத்திய அரசே தற்போதைய தமிழக அரசை தாங்கி பிடித்திருக்கிறது என்று டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி