ஆப்நகரம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு பயணம்: எந்த நாட்டுக்கு தெரியுமா?

Samayam Tamil 1 Nov 2019, 5:07 pm
சென்னை: முதல்வர் பழனிசாமியை தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகிற 7ஆம் தேதி வெளிநாடு செல்லவுள்ளார்.
Samayam Tamil panneerselvam


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்றார். அந்த பயணத்தின் போது ரூ.8,835 கோடி மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், அதன் மூலம் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் பழனிசாமி இன்று வெளிநாடு பயணம்!

இதையடுத்து, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வெளிநாடு செல்வார் என தகவல்கள் வெளியாகின. தற்போது வீட்டு வசதி துறை துணை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே கட்டுமானம் தொடர்பாக புதிய தொழில்நுட்பங்களை தனது வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது அவர் பார்வையிடுவார் என கூறப்பட்டது.

பண கிலுகிலுப்பால் அதிமுக வெற்றி: மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், வருகிற 7ஆம் தேதி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அப்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து அவர் ஆய்வு செய்வார் என தெரிகிறது. துணை முதலமைச்சருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.

அடுத்த செய்தி