ஆப்நகரம்

இடைத்தோ்தலுடன் அமமுக என்ற அணி இல்லாமல் போய்விடும் – ஓ.பன்னீா் செல்வம்

திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தலுடன் அமமுக என்ற அணி இல்லாமல் போய்விடும் என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்துள்ளாா்.

Samayam Tamil 1 Sep 2018, 3:44 pm
திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தலுடன் அமமுக என்ற அணி இல்லாமல் போய்விடும் என்று துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்துள்ளாா்.
Samayam Tamil O Panneer Selvam


திருநெல்வேலியின் நெற்கட்டும் செவல் பகுதியில் இன்று காலை சுதந்திர போராட்ட வீரா் புலித்தேவரின் 303வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் கடம்பூா் ராஜூ, ராஜலட்சுமி, மணிகன்டன், ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், துரைக்கண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

துணைமுதல்வா், அமைச்சா்கள் புலித்தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய துணைமுதல்வா் பன்னீா் செல்வம் திருப்பரங்குன்றம் தொடங்கி திருவாரூவரை அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். டிடிவி தினகரன் வானத்தை பாா்த்துக் கொண்டு பகல் கனவு காண்கிறாா். திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தல்களுக்கு பின்னா் அமமுக என்ற அணி இல்லாமல் போய்விடும் என்று தொிவித்தாா்.

அடுத்த செய்தி