ஆப்நகரம்

மெரினாவில் போராட்டக்காரர்களுடன் துணை ஆணையர் பேச்சுவார்த்தை

மெரினா கடற்கரையில் போராட்டம் மேற்கொண்டுள்ளவர்களிடம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

TNN 20 Jan 2017, 11:33 am
மெரினா கடற்கரையில் போராட்டம் மேற்கொண்டுள்ளவர்களிடம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Samayam Tamil deputy commissioner speaks to marina jallikattu protesters
மெரினாவில் போராட்டக்காரர்களுடன் துணை ஆணையர் பேச்சுவார்த்தை


ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. நேற்று, போராட்டக்காரர்களின் கோரிக்கையின் எதிரொலியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பில் திருப்திகரமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இதனால், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசே அவசரச்சட்டத்தை இயற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள போராட்டக்காரர்களிடம் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழக அரசு அவசரச்சட்டம் இயற்றவுள்ளதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெறுவது பற்றி அவர் பேசியுள்ளார்.

அடுத்த செய்தி