ஆப்நகரம்

சால்வன்ஸ் சான்றிதழ் வழங்க ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியர் கைது!

திருச்செந்தூரில் தனியார் நிதி நிறுவனத்திற்கு சால்வன்ஸ் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 7 May 2019, 11:29 am
திருச்செந்தூரில் தனியார் நிதி நிறுவனத்திற்கு சால்வன்ஸ் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil சால்வன்ஸ் சான்றிதழ் வழங்க ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியர் கைது!
சால்வன்ஸ் சான்றிதழ் வழங்க ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாச்சியர் கைது!


திருச்செந்தூர் அருகே உள்ள கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிதி நிறுவனம் தொடங்குவதற்காக செல்வநிலை சான்றிதழ் (சால்வன்ஸ் சர்டிபிகேட்) கேட்டு மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் சான்றிதழ் வழங்குவதற்காக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோமதி சங்கர் பாலமுருகனிடம் ரூ. 20,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத பாலமுருகன் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுப்பையா, பாலமுருகனிடம் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். பாலமுருகன் அதனை துணை தாசில்தார் கோமதி சங்கரிடம் வழங்கியபோது, அங்கு ஒளிந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கோமதி சங்கரை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து கோமதி சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சான்றிதழ் வழங்குவதற்கு துணை வட்டாச்சியர் ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி