ஆப்நகரம்

ஒரு நாளைக்கு 20,000 லி குடிநீர் தரும்; இந்த ஜீப்பை நம்ம ஊருக்கு கொண்டு வரலாமே!

கடல் நீரை குடிநீராக்கும் ஜீப் ஒன்று, தமிழகத்திற்கு எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 20 Jun 2019, 7:00 pm
தமிழகம் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களைத் தூக்கிக் கொண்டு, தண்ணீருக்காக அலைமோதிக் கொண்டிருக்கின்றனர். எங்காவது மழை பெய்யாதா, தண்ணீர் பஞ்சம் தீராதா என்று ஏங்கி வருகின்றனர்.
Samayam Tamil Buggy Jeep


கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் வகுத்து, தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் இது முழுமையான பயன் தருகிறதா என்றால் சந்தேகத்திற்கு உரியதே. இந்நிலையில் தண்ணீரைப் பஞ்சத்தை தீர்க்க பெரிதும் உதவும் பக்கி ஜீப் குறித்து இங்கே காணலாம்.

கடந்த ஆண்டு இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் மோடிக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கினார். அதுதான் பக்கி ஜீப். இது தினசரி 20,000 லிட்டர் கடல் நீரை குடிநீராக்கி தரும். மேலும் மாசு கலந்த 80,000 லிட்டர் நீரை, தினசரி குடிநீராக்கி தரும் திறன் பெற்றது.

முன்னதாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற போது, பக்கி ஜீப்பை பார்த்து பிரதமர் மோடி வியந்துள்ளார். ஓலிவா கடற்கரையில் அதன் செயல்பாட்டை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். இந்த ஜீப் சுத்திகரித்த நீரை மோடி குடித்து பார்த்தார்.

இதனை மறக்காமல் நினைவு வைத்துக் கொண்டு நெதன்யாகு, இந்தியா வந்த போது மோடிக்கு பரிசாக அளித்துள்ளார். இது தமிழகத்திற்கு மிக முக்கிய தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நமது மக்களின் தண்ணீர் தேவையை தீர்க்க, சென்னையில் கொண்டு வந்து நிறுத்தினால் பொதுமக்கள் குடங்களுடன் சென்று சூழ்ந்து கொள்வர். இதனை பயன்படுத்த தமிழக அரசு முயற்சிக்கலாமே என்று பலரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தற்போது குஜராத் மாநிலத்தின் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பயன்பாட்டில் பக்கி ஜீப் இருக்கிறது. அங்குள்ள கட்ச் பகுதியில் கடும் வறட்சி நிலவும் நிலையில், இந்த ஜீப் மூலம் போதிய குடிநீரை பெற்று வருகின்றனர்.

அடுத்த செய்தி