ஆப்நகரம்

13 கொலைகள் செய்த காட்டுயானை... யார் இந்த படையப்பா??

படையப்பா என்னும் சொல் 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வப்போது பிடிவாதமான பெண்களைக் குறிக்கும்போது மட்டும் நீலாம்பரி வடிவில் அவ்வப்போது நினைவுக்கு வந்தது. ஆனால் தற்போது ஒரு ஒற்றை காட்டு யானை வடிவில் படையப்பா என்ற சொல் மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.

Samayam Tamil 30 Oct 2019, 9:23 am
படையப்பா என்னும் சொல் 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவ்வப்போது பிடிவாதமான பெண்களைக் குறிக்கும்போது மட்டும் நீலாம்பரி வடிவில் அவ்வப்போது நினைவுக்கு வந்தது. ஆனால் தற்போது ஒரு ஒற்றை காட்டு யானை வடிவில் படையப்பா என்ற சொல் மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
Samayam Tamil details about padaiyappa a wild elephant which killed 13 lives so far
13 கொலைகள் செய்த காட்டுயானை... யார் இந்த படையப்பா??


யார் இந்த படையப்பா யானை. அடுத்து பேசப்படப்போகும் யானையா இது.?

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பிறந்து மூணாறு பகுதியில் சுற்றித்திரியும் இந்த யானை, கடந்த சில நாட்களாகவே கன்னிமலி மலைப் பாதையின் குறுக்கே நின்றுகொண்டு பொது மக்களையும் அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகளையும் வெகுவாக அச்சுறுத்தி வருகிறது என்று கேரள வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

நேற்று ( 26 அக்டோபர் ) செவ்வாய்க் கிழமை மூணாறு , மறையூர் செல்லும் மலைப் பாதையில் வாகனங்களை மறித்து நின்றுகொண்டு தன் பாணியில் போக்குவரத்தை இடையூறு செய்தான் படையப்பா.

அதென்ன படையப்பா என்று பெயர்? என்று கேட்டால், ரஜினியின் வெற்றி படமான படையப்பா படத்தின் கம்பீரத்தை கருத்தி கொண்டு வைக்கப்பட்ட பெயர் தான் படையப்பா என்று தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள் .

இதுமட்டும் இன்றி கேரள வனப்பகுதிகளில் இதுவரை சுமார் 13 பேரை கொன்றுள்ள கொலைகார யானை என்கிற பட்டமும் இந்த படையப்பாவுக்கு உண்டு ..

அதேபோல நேற்று மலைப்பாதையை மறித்தபோது, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கேரள வனத்துறையினர் எவ்வளவு முயற்சித்து விரட்டியும் நகராத படையப்பா யானை சிறிது நேரம் கழித்து தானாகவே அங்கிருந்து நகர்ந்து சென்றது..

இதுகுறித்து வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி