ஆப்நகரம்

யார் இந்த திருநாவுக்கரசு? பொள்ளாச்சி வழக்கில் முக்கிய குற்றவாளியின் பின்னணி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு யார் என்பதை இங்கே அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 14 Mar 2019, 2:31 pm
இயற்கை எழில் சூழந்த பொள்ளாச்சியில், கடந்த சில நாட்களாக பெண்கள் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், 300க்கும் மேல் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் என நெஞ்சை உறைய வைக்கும் வகையில், விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
Samayam Tamil Thirunavukkarasu


இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் திருநாவுக்கரசு. இவர் எம்.பி.ஏ படித்து விட்டு, பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். காலை 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால், இரவு 10.30க்கு தான் திரும்பி வருவாராம்.

இதற்கிடையில் நகைக் கடைக்கார பெண் மீது காதல் கொண்டுள்ளார். அவர் மீது அளவுக்கு அதிகமாக காதலால், தனது கையில் பச்சைக் குத்திக் கொண்டார். இந்த விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதில் பெண் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.

அதனால் பெண் வீட்டாருக்கு தெரியாமல், திருநாவுக்கரசின் தாயார் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன்பிறகு சில நாட்களிலேயே திருநாவுக்கரசின் உண்மை முகம் தெரியவர, அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே சண்டை போட்டுக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது அப்பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு, நிம்மதியாக உள்ளார்.

அடுத்த செய்தி