ஆப்நகரம்

காதல் விவகாரம்: பெற்றோரை கைது செய்ய உயர்நீதிமன்றம் எதிர்ப்பு!

மகன் காதலித்த பெண்ணுடன் தலைமறைவானதால், மகனின் தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகனின் தாயை உடனடியாக விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 16 Mar 2018, 12:52 pm
மகன் காதலித்த பெண்ணுடன் தலைமறைவானதால், மகனின் தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் நடைபெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகனின் தாயை உடனடியாக விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil detention of boy mother in missing girls cases is wrong says madras high court
காதல் விவகாரம்: பெற்றோரை கைது செய்ய உயர்நீதிமன்றம் எதிர்ப்பு!


நாமக்கலில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது 17 வயது மகள். யுவன் சங்கர்(19) என்பவரை காதலித்து வந்ததாகவும், அவா்கள் தற்போது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதகாவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவிந்த ராஜ் தனது மகளை காணவில்லை என்று பள்ளிப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது தொடா்பாக காவல்துறையினா் வழக்கு பதிவு செய்திருந்தனா். இந்த விவகாரத்தில் யுவன் சங்கரின் அம்மாவை காவல்துறையினா் கைது செய்தனர். அவர் தற்போது சேலம் பெண்கள் காவல்நிலையத்தில் உள்ளார்.

இந்த வழக்கு இன்று எஸ்.டி.செல்வம், என்.சத்தீஷ் குமார் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது ’குழந்தைகள் செய்த விஷயத்திற்கு பெற்றோரை கைது செய்வது சரியான விஷயம் அல்ல. எனவே உடனடியாக ரூ.5000 பெயிலில் அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அடுத்த செய்தி