ஆப்நகரம்

சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு!

இன்று முதல் அக்டோபர் 31 வரை 144 சிவகங்கை மாவட்டத்தில் தடை உத்தரவு

Samayam Tamil 23 Oct 2018, 11:45 am
தேவர் பூஜை, மருதுபாண்டியர் நினைவுதினத்தை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31 வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sivagangai 144


இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு பெரும்பங்காற்றியவர்கள் மருதுசகோதர்ர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்களது குரு பூஜை தினம் இம்மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, மருதுபாண்டியரின் 217வது குரு பூஜை தினம் அக்டோபர் 27ம் தேதியும், முத்துராமலிங்கத் தேவரின் 111வது ஜெயந்தி விழா அக்டோபர் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிவகங்கையில் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும், அமமுக சார்பில் அக்டோபர் 27ம் தேதி சிவகங்கையில் நடைபெறும் மருதுசகோதரர்களின் 217வது குருபூஜை தினத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். இந்நிலையில், பாதுகாப்பு கருதி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரையில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி