ஆப்நகரம்

தேசத்தின் வளர்ச்சிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கையில்; மாற்றம் கொண்டு வா; பாலகுருசாமி!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிறப்புடன் செயலாற்ற இ.பாலகுருசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

Samayam Tamil 20 Jan 2018, 4:04 pm
சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிறப்புடன் செயலாற்ற இ.பாலகுருசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.
Samayam Tamil develop a mindset of innovation civil service aspirants told
தேசத்தின் வளர்ச்சிக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கையில்; மாற்றம் கொண்டு வா; பாலகுருசாமி!


சென்னை அண்ணா நகரில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் யு.பி.எஸ்.சி உறுப்பினர் இ.பாலகுருசாமி கலந்து கொண்டார்.

ஐ.ஏ.எஸ் தேர்விற்கு ஆயுத்தமாகி வருபவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா போன்ற நாடுகளில் சிவிஸ் சர்வீஸ் அதிகாரிகளின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

திறன், தன்மை, படைப்பாற்றல் மற்றும் தைரியம் ஆகியவை மிகச்சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் முக்கிய குணநலன்கள் ஆகும்.

தேசத்தின் வளர்ச்சிக்கு தேவையானதை அறிந்து, அதனை நிறைவேற்றும் முயற்சியில் முழு மூச்சோடு இயங்க வேண்டும்.

சமூக மாற்றத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பங்கு அவசியம். மேலும் JUMPSTART எனப்படும் திட்டத்தை கல்லூரி மாணவர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநர் இஸ்ரேல் ஜெபசிங் தெரிவித்தார்.

Develop a mindset of innovation, civil service aspirants told.

அடுத்த செய்தி