ஆப்நகரம்

ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா என்று அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது.

TNN 3 Mar 2017, 4:53 pm
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா என்று அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் யார் அடுத்த முதல்வர் யார் என்பதில் இருவருக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் ஓபிஎஸ்க்கு 12 எம்.பிக்கள் மற்றும் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் 124 எம்.எல்.ஏக்களை ஆதரவாக வைத்திருந்த சசிகலா அணியின் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.
Samayam Tamil deviation from the chief executives of the team opanneerselvam
ஓபிஎஸ் அணியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்


இதன் காரணமாக தற்போது ஓபிஎஸ் அணி சசிகலாவிடம் இருந்து அதிமுக கட்சியை கைப்பற்ற தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் குறைந்த எண்ணிக்கையுடைய அணியான ஓ.பி.எஸ் அணியிலிருந்து இரண்டு கீழ்மட்ட நிர்வாகிகள் விலகி, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் சசிகலா அணியில் இணைந்தனர்.

அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ் அணியில்தான் உள்ளனர். அப்படியிருக்கும் போது தற்போது நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா மற்றும் கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி இன்று துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் இணைந்தனர்.

அடுத்த செய்தி