ஆப்நகரம்

பதற வைக்கும் வீடியோ!!

திருச்சி அருகே கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது பக்தர் ஒருவர் தவறி 5000 அடி பள்ளத்தில் விழுந்தார்.

TOI Contributor 14 Oct 2017, 5:21 pm
திருச்சி அருகே கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது பக்தர் ஒருவர் தவறி 5000 அடி பள்ளத்தில் விழுந்தார்.
Samayam Tamil devotee fell down from a height of 5000 feet in tamil nadu temple
பதற வைக்கும் வீடியோ!!


திருச்சி மாவட்டம் முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 5000 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கோயில் பிரகாரத்தை சுற்றி வருவது வழக்கம். இந்த மாதம் புரட்டாசி மாதம் என்பதால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்று கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் கோயில் பிரகாரத்தை இன்று காலை சுற்றி வந்துள்ளார். அப்போது தவறி விழுந்தார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கோயில் நிர்வாகத்துக்கு புகார் அளிக்க அவர்கள் போலீசாருக்கு தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ​ உறவினர்கள் தகவல் கொடுத்தால்தான் மீட்போம் என்று போலீசார் தெரிவித்து வருவதாகவும், இதனால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அவர் இறந்து இருப்பார் என்று முதல் கட்ட தகவல் கூறுகிறது.

கீழே தவறி விழுந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. கோயில் பிரகாரம் சுற்றி வரும் இடம் குறுகலானது என்பதால், சரிந்து கீழே விழுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் ஆர்வத்தில் இவ்வாறு செய்கின்றனர். கோயில் நிர்வாகமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Devotee fell down from a height of 3,500 feet in Tamil Nadu temple

அடுத்த செய்தி