ஆப்நகரம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொரோனா ஷாக்; தமிழக பக்தரால் வெடித்த பதற்றம்!

ஐயப்பன் கோயிலுக்கு சென்ற தமிழக பக்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Oct 2020, 11:28 am
கேரள மாநிலம் சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தமிழக பக்தர்கள் வழிபடச் செல்வது வழக்கம். இந்த சூழலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோயில் நடை, கடந்த 16ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுவர். இவர்கள் கடந்த 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழை இணைக்க வேண்டும். நாள்தோறும் 250 பேர் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் உரிய சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Sabarimala Temple


இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சபரிமலைக்கு வந்த பின்னரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் அனைத்து பக்தர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை புரியத் தொடங்கியுள்ளனர். வரும் 21ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

நவராத்திரி பிரம்மோற்சவம்...திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்!

இந்நிலையில் தமிழக பக்தர் ஒருவருக்கு சபரிமலைக்கு வந்த பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கோயில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

உடனே சம்பந்தப்பட்ட நபரை பத்தினம்திட்டாவில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் வேறு பக்தர்கள் யாரும் உடன் வரவில்லை. தமிழகத்தில் இருந்து தனியாக சபரிமலைக்கு சென்றுள்ளார். இருப்பினும் பிற பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி