ஆப்நகரம்

போலீசில் சிக்கியதையடுத்து இளைஞர்களுக்கு ஜெய் அட்வைஸ்!

அதிக சத்தம் எழுப்பிய கார் ஓட்டியதாக நடிகர் ஜெய்யை போலீசார் மடக்கிய நிலையில், இளைஞர்களுக்கு நடிகர் ஜெய் அட்வைஸ் செய்துள்ளார்.

Samayam Tamil 27 Jun 2018, 3:57 pm
அதிக சத்தம் எழுப்பிய கார் ஓட்டியதாக நடிகர் ஜெய்யை போலீசார் மடக்கிய நிலையில், இளைஞர்களுக்கு நடிகர் ஜெய் அட்வைஸ் செய்துள்ளார்.
Samayam Tamil actor jai


சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று இரவு அதிக சத்தம் எழுப்பியவாறு வந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டி வந்தது நடிகர் ஜெய் என்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியே நீங்களே இப்படி போக்குவரத்து விதிமுறைகளை மீறலாமா என்று அவரிடம் போலீசார் கேட்டனர்.


தன் தவறை உணர்ந்த ஜெய் இனிமேல் இது போல் கார் ஓட்ட மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டார். பின்னர், அவரை வைத்தே வீடியோ எடுத்த போலீசார், இளைஞர்களுக்கும் இதை அறிவுறுத்துமாறு கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட நடிகர் ஜெய், இளைஞர்களிடம்போக்குவரத்து விதிமுறைகளை மீறாதீர்கள், அதிக சத்தம் எழுப்பும் காரை பயன்படுத்தாதீர் என்று அறிவுறுத்தினார்.

அடுத்த செய்தி