ஆப்நகரம்

"உடனே இத பண்ணுங்க!" - டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!

அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி., சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்

Samayam Tamil 17 Sep 2021, 3:57 pm

ஹைலைட்ஸ்:

  • காவல் நிலையத்தின் பெயர் பலகையில் தனியார் நிறுவனத்தின் பெயர் இருந்தால் உடனே நீக்க வேண்டும்
  • டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Sylendra-Babu
சைலேந்திர பாபு
காவல் நிலையத்தின் பெயர் பலகையில், தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால், உடனே நீக்க வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு, அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

சில காவல் நிலையங்களில் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அது பொது மக்களிடையே ஒரு தவறான புரிதலை காட்டும். எனவே, தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும்.
மகளை கடத்திய தந்தை - 14 ஆண்டுகளுக்கு பிறகு தாயுடன் இணைந்த மகள்!
பெயர் பலகையில் காவல் துறையின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். புதிதாக பெயர் பலகை வைக்க காவல் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

அடுத்த செய்தி