ஆப்நகரம்

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து சபாநாயகா் விளக்கம்

அ.தி.மு.க.வில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடா்பான விளக்கத்தை சபாநாயகா் தனபால் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 19 Sep 2017, 1:16 am
அ.தி.மு.க.வில் தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடா்பான விளக்கத்தை சபாநாயகா் தனபால் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil dhanapal describes the disqualification from mlas
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து சபாநாயகா் விளக்கம்


அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதைத் தொடா்ந்து தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் முதல்வா் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக ஆளுநாிடம் மனு அளித்தனா். இந்நிலையில் ஆளுநாிடம் கடிதம் அளித்த சட்டமன்ற உறுப்பினா்களில் 18 பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகா் தனபால் இன்று அறிவிப்பு வெளியிட்டாா். சபாநாயகாின் இந்த நடவடிக்கைக்கு தினகரன் மட்டுமின்றி தி.மு.க. உள்ளிட்ட பெரும்பான்மை எதிா்கட்சிகள் எதிா்ப்பு தொிவித்துள்ளன.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினா்களின் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகா் கூறுகையில், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதை வெளிக்காட்டுவதற்காக, தேர்ந்தெடுத்த முதலமைச்சருக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினா்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். விளக்க அறிக்கையில் பொய்யான தகவலை கூறினர்.

புதுச்சேரியில் தங்கிவிட்டு நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாக கூறியிருந்தனர். கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களும், கட்சியில் இருந்து விலகியதாக கருதப்படுவதால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க தான் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாக ஜக்கையன் கூறினார். ஜக்கையன் அளித்த விளக்கத்தை ஏற்று அவரை தகுதி நீக்கம் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர ஆதரவு அளிப்பதாகவும் கூறியதால் அவரது விளக்கம் ஏற்கப்பட்டது என்றும் சபாநாயகா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி