ஆப்நகரம்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள்: மாணவியின் தந்தை!

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள் என பலியான மாணவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 20 Nov 2018, 10:19 am
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் விடுதலையானது வருத்தமளிக்கிறது என பலியான மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறியுள்ளார்.
Samayam Tamil Dharmapuri bus burning
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள்: மாணவியின் தந்தை!


தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், மூவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மூவரின் விடுதலை குறித்து, பலியான மாணவி காயத்ரியின் தந்தையும், முன்னாள் அரசு கல்லூரி முதல்வருமான வெங்கடேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 3 பேருக்கும் மரண தண்டனை என்று அறிவித்து, அதன்பிறகு அதனை ஆயுள் தண்டனை என மாற்றினார்கள். அன்றே நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள். என் மகளை பறிகொடுத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை” என்று மனமுடைந்து கூறினார்.

மேலும் மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், ”கோகிலவாணி இறந்த பிறகு படுத்த படுக்கையான அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்தே போய்விட்டார். கவர்னர் முதலில் விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார். தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இடையில் என்ன நடந்தது?. 3 மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. இதெல்லாம் பச்சை துரோகம். என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி