ஆப்நகரம்

தர்மபுரி பள்ளி மாணவி உயிரிழப்பு: கயவர்களை கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!

தர்மபுரியில் 17வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 11 Nov 2018, 5:22 pm
தர்மபுரியில் 17வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil Stalin-DMK


தருமபுரி மாவட்டம்அரூர் அருகேகடந்தஇரு தினங்களுக்குமுன் இரவு, பிளஸ்டு மாணவி ஒருவர் தனியாக சென்றுள்ளார். அப்போதுஅவரைசில நபர்கள்பின்தொடர்ந்துசென்று பாலியல் வன்கொடுமை செய்யமுயன்றுள்ளனர்.அவர்களிடமிருந்துதப்பிக்கப் போராடிய மாணவியைகடுமையாக தாக்கி துன்புறுத்தி உள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்துதப்பிச் சென்றுள்ளனர்.

பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை முயற்சியில் பாதிக்கப்பட்ட மாணவி உயிரிழந்தது, தருமபுரி பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துசதீஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தர்மபுரியில் 17வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் கயவர்களை கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:

'தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!

இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்!

பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ?' என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி