ஆப்நகரம்

எங்கள் தலைமையை ஏற்பவா்களுடன் கூட்டணி – டிடிவி தினகரன்

அமமுக தலைமையை ஏற்பவா்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கழகத்தின் துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 11 Jun 2018, 12:23 pm
அமமுக தலைமையை ஏற்பவா்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கழகத்தின் துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil TTV Dhinakaran


அமமுக அமைப்பின் துணைப் பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், 18 சட்டமன்ற உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமான வகையில் தீா்ப்பு வரும் என்று எதிா்பாா்க்கின்றோம். மேலும் 18 சட்டமன்ற உறுப்பினா்களும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவா்கள் கட்சிக்காக தியாம் செய்தவா்கள். அவா்கள் அதிருப்தியில் இல்லை.

கடந்த மாதம் 27ம் தேதி திட்டமிடப்பட்ட கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மாற்றி வைக்கப்பட்ட போது ஜூன் 3ம் தேதியில் தான் நல்ல நாள் இருந்தது. கருணாநிதியை எதிர்த்துதான் எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கினார். அவர்களோடு உறவு வைத்துக்கொண்டால் அதிமுகவினர் தொண்டா்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்.

அதே நேரத்தில் அரசியலில் வெற்றி பெற்ற தலைவர் கருணாநிதி. அவரது பிறந்தநாளில் கட்சி அலுவலகத்தை திறப்பது தவறில்லை. இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அமமுகவின் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்றார்.

அடுத்த செய்தி