ஆப்நகரம்

நீட் எதிர்ப்பு பிரச்சாரம்: தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது!

அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக கூறி, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

TNN 2 Oct 2017, 2:44 pm
சேலம்: அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததாக கூறி, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil dhinakaran supporters held for distributing pamphlets againts govts
நீட் எதிர்ப்பு பிரச்சாரம்: தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது!


சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ எஸ் இ வெங்கடாசலம் உள்ளிட்ட 4 பேர், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

இந்த பிரசுரங்களில், நீட் தேர்வை கொண்டு வந்து, மத்திய, மாநில அரசுகள் மாணவி அனிதாவை கொண்டு விட்டன. அவர்கள் தான் அனிதாவின் மரணத்திற்கு பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும் தமிழக அரசு, மத்திய அரசிற்கும், பாஜகவிற்கும் அடிமை போல் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த பிரசுரங்களை கடந்த மாதம் 29ஆம் தேதி, டிடிவி ஆதரவாளர்கள் தாதகாப்பட்டி பகுதியில் விநியோகித்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக மண்டல செயலாளர் கே.ஆர்.எஸ் சரவணன் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி சட்டப்பிரிவு எண் 164, 143, 153, 500, 504 மற்றும் 506(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வெங்கடாசலம்(52), சந்திரன்(52), சூர்யா(38), களவாணி(33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Dhinakaran supporters held for distributing pamphlets slamming central and TN govts.

அடுத்த செய்தி