ஆப்நகரம்

அடுத்த 2 மாத உதவித்தொகையை முன்பே வழங்க முடிவு - மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை இரண்டு மாதங்களுக்கு முன்பே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Mar 2020, 12:11 pm
அடுத்த இரண்டு மாதங்களுக்கான மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை முன்னதாகவே வழங்க மாற்றுத்திறனாளிகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.
Samayam Tamil org chart - DA commission


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்றபோதும் நேரக்கட்டுப்பாட், போலீஸ் கெடுபிடி ஆகியவற்றாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்கிடையில், ஏழை எளிய மக்களுக்கு உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது தமிழக அரசு. ஆனால், இது நிச்சயமாகப் போதுமான தொகை அல்ல என்றும் உயர்த்தித் தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

கொரோனா பரவலைத் தடுக்க திருச்சியில் உருவான ரோபோ!

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு ஊக்கத்தொகையான ரூபாய் 1,500ஐ அடுத்த இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து இப்போதே வழங்கிவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை அவரவர் வங்கிக்கணக்குகளில் சேர்க்கப்படவேண்டும் என்றும் , மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி