ஆப்நகரம்

தேரை இழுக்க கஷ்டம்: பக்தர்களுக்கு உதவி செய்த கோவில் யானை

வைகாசி விழாவையொட்டி பழனியில் நடந்த தேரோட்டத்தில் தேரை இழுக்க கோவில் யானை ஒன்று உதவி செய்துள்ளது.

TNN 8 Jun 2017, 1:25 pm
வைகாசி விழாவையொட்டி பழனியில் நடந்த தேரோட்டத்தில் தேரை இழுக்க கோவில் யானை ஒன்று உதவி செய்துள்ளது.
Samayam Tamil difficult to pull the chariot the temple elephant that helped the devotees
தேரை இழுக்க கஷ்டம்: பக்தர்களுக்கு உதவி செய்த கோவில் யானை


பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில், நான்கு ரத வீதியில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை உள்ளிட்ட அருள் பாளித்தனர். அப்போது தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்ற பக்தர்கள் மேடான பகுதியில் தேரை இழுக்க முடியாமல் சிரமப்பட்டனர். அந்த நிலையில், அங்கு வந்த கோவில் யானை தேரின் பின்புறத்தை முட்டி பக்தர்கள் தேரை இழுப்பதற்கு உதவி செய்தது. தேரை இழுக்க தானாக வந்த கோவில் யானையை கண்டு பக்தர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி