அதிமுக கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை தமிழக முதல்வர் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல டிடிவி தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளது.
அதிமுக கட்சியினர் இரண்டு அணிகளாக பிரிந்ததால் அந்தக் கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து, இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையம் முன்வைத்தனர்.
மேலும், சின்னத்தைப் பெற இரு அணிகளின் சார்பாகவும் பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது.
அதில் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் அணியினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி இதைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு வழங்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிடிவி தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக கட்சியினர் இரண்டு அணிகளாக பிரிந்ததால் அந்தக் கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து, இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை தேர்தல் ஆணையம் முன்வைத்தனர்.
மேலும், சின்னத்தைப் பெற இரு அணிகளின் சார்பாகவும் பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது.
அதில் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு வழங்குவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் அணியினர் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி இதைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு வழங்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் டிடிவி தரப்பினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.