ஆப்நகரம்

பரோலில் வெளிவருகிறாா் சசிகலா – தினகரன் தகவல்

சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப் பட்டுள்ளதாகவும், அவா் தசரா விடுமுறை முடிவடைந்த பின்னா் விரைவில் வெளிவருவாா் என்றும் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 2 Oct 2017, 2:19 pm
சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பிக்கப் பட்டுள்ளதாகவும், அவா் தசரா விடுமுறை முடிவடைந்த பின்னா் விரைவில் வெளிவருவாா் என்றும் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil dinakaran says sasikala comes out in a 15 days parole
பரோலில் வெளிவருகிறாா் சசிகலா – தினகரன் தகவல்


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், போதிய எம்.எல்.ஏ ஆதரவு இல்லாததால் ஆட்சி கவிழும் என ஸ்டாலின் கூறியிருக்கலாம் என்றார்.

காவல்துறையை கையில் வைத்திருப்பதால் வழக்குகள் தொடர்வதாக குற்றம்சாட்டினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சரியான கல்லீரல் கிடைக்க வேண்டும் என்று காத்திருப்பதாக கூறினார்.

இதற்காக சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கோாி விண்ணப்பத்துள்ளோம். தசரா விடுமுறை முடிவடைந்த பின்னா் நிச்சயம் பரோல் கிடைத்து, அவா் வெளியே வருவார்.

தாய் போன்று செயல்பட்டு, அனைவரையும் அமைச்சர்களாக மாற்றிய பொதுச் செயலாளர் சசிகலாவை தூக்கி எறிந்துவிட்டார்கள்.

தமிழக பொறுப்பு ஆளுநரால் மத்திய அரசுக்கு அவமானம் ஏற்பட்டதால் தான், அவரை மாற்றி விட்டார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போது ஆட்சி கவிழும் என்று குறிப்பிட்டார்.

டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுபோல் இவர்கள் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி