ஆப்நகரம்

பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட டிடிவி தினகரன்!

பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட டிடிவி தினகரன்!

TOI Contributor 7 May 2017, 7:59 pm
இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் பெரிய திருப்பமாக வழக்கறிஞர் கோபிநாத் அப்ரூவராக மாறியிருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil dinakarans advocate becomes approver
பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட டிடிவி தினகரன்!


தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற சசிகலா அணி அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுகேஷ் எனும் ஏஜெண்ட் மூலம் லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்ந நிலையில் சென்னை வழக்கறிஞர் கோபிநாத் டெல்லி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஹவாலா ஏஜென்டிடம் சுகேஷ் பணம் பெற்றதை தான் நேரில் பார்த்ததாகவும், பணத்தை பெற்றுக்கொண்ட சுகேஷ் சென்னையில் உள்ள நபரிடம் தொலைபேசியில் பேசினார் என்றும் கோபிநாத் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் தினகரனின் நீதிமன்ற காவல் வருகின்ற 15ஆம் தேதி முடிவடையும் நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர் கோபிநாத் டிடிவி தினகரனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதை அடுத்து ஜாமீன் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி