ஆப்நகரம்

Jallikattu: நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது 10 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தவசி மடையில் புனித அந்தோணியார் கோயிலின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது.

Samayam Tamil 11 Feb 2019, 3:47 pm
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள தவசி மடையில் புனித அந்தோணியார் கோயிலின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைப்பெற்றது.
Samayam Tamil jallikattu1


இந்த ஜல்ல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து காளைகள் அழைத்தவரப்பட்டிருந்தது. 500 காளைகள் கலந்து கொண்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

மாட்டுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கக் காசு, வெள்ளிக் காசு , வேட்டி துண்டு, உள்ளிட்டவைகள் பரிசுப் பொருள்களாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.

அடுத்த செய்தி