ஆப்நகரம்

மாணவர்கள் கவலையால், அழுது புரளும் தலைமை ஆசிரியர்

பாடம் நடத்த முடியாமல் திணறியதால்தான் இந்த நிலை,

Samayam Tamil 21 Nov 2019, 9:48 am
பணி இட மாற்றம் கோரி, தலைமை ஆசிரியர் தரையில் படுத்து அழுது புரண்ட அவலம் திண்டுக்கலில் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil 100 (7)


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம், அய்யம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா. இவர் கடந்த 3 ஆண்டுகளாக இதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இந்த பள்ளியில் மொத்தம் 2 மாணவர்கள் மட்டுமே படித்து வந்துள்ளனர்.

இதனால், மனமுடைந்துபோன இந்திரா தான் பாடம் நடத்த முடியவில்லை எனப் பணி இட மாற்றம் வேண்டும் எனக் கூறி பலமுறை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பித்துள்ளார். எனினும், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், இந்திரா சமீப நாட்களாகக் கடுமையான மன உளைச்சலிலிருந்துள்ளார்.

ஃபோன் செய்தால் போதும்...கஞ்சா டோர் டெலிவரி! : போலீசில் சிக்கிய ஐடி, ஐஐடி ஊழியர்கள்

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பணி இட மாற்றம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்துச் சென்ற இந்திரா, தனக்குப் பணி இட மாற்றம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். இந்திராவின் கோரிக்கைக்கு ஆலோசனைக் கூட்ட அதிகாரிகள் முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், இந்திரா தனக்குக் கட்டாயம் பணி இட மாற்றம் வேண்டும் எனக் கூறி அதிகாரிகள் முன்பு அழுது புரண்டுள்ளார். அங்கிருந்தவர் இந்திராவைச் சமாதானம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

சென்னை: காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர் மாயம்..

இதையறிந்து அங்குக் காவல் துறையினர் விரைந்தனர். அதன்பின் தனது போராட்டத்தைக் கைவிட்ட இந்திரா, தனது நிலை குறித்துக் காவல் துறையில் விளக்கியுள்ளார். இப்போது, இந்திரா பணி செய்யும் தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவர்கள் கூட இல்லை எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி