ஆப்நகரம்

திண்டுக்கல் பழனி மலைக்கோவிலில், விரைவில் 2வது ரோப்கார் சேவை தொடங்க திட்டம்...

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை முருகன் கோவிலில் விரைவில் 2வது ரோப் கார் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

TNN 24 Feb 2017, 12:40 pm
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை முருகன் கோவிலில் விரைவில் 2வது ரோப் கார் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Samayam Tamil dindigul in palani temple as soon as to start the 2nd rope car service project
திண்டுக்கல் பழனி மலைக்கோவிலில், விரைவில் 2வது ரோப்கார் சேவை தொடங்க திட்டம்...


தமிழகத்தில் முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோவிலில் ரோப் கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2வது ரோப்கார் சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக்க இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.


மேலும், மலைக்கோவிலில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமனி தெரிவித்துள்ளார். 2வது ரோப் கார் சேவை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், விரைவில் பணிகள் துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தைப்பூசம் மற்றும் பண்டிகைக் காலங்களில் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டிய ஏற்பாடுகள் முன்னதாகவே செய்யப்படும் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி