ஆப்நகரம்

பழங்குடியின மாணவரை செருப்பை கழற்றிவிடச் சொன்ன அமைச்சர்!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு சிறுவனை அழைத்து செருப்பைக் கழட்டச் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2020, 12:23 pm
சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசி பரபரப்பைக் கிளப்பும் தமிழ்நாடு அமைச்சர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன். வனத் துறை அமைச்சராக இருக்கும் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கிவைக்கச் சென்றார்.
Samayam Tamil பழங்குடியின மாணவரை செருப்பை கழற்றிவிடச் சொன்ன அமைச்சர்


அவருடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அதிகாரிகள் ஆகியோர் உடன் சென்றனர். அப்போது அமைச்சர் தூரத்தில் நின்றிருந்த பழங்குடி மாணவர் ஒருவரை “டேய் தம்பி, வாடா, இங்க வாடா” என்று அழைத்தார்.

அருகில் வந்த மாணவரை, “செருப்பை கழற்றிவிடுடா” என்றார். அந்த மாணவரும் கீழே அமர்ந்து தனது கைகளால் செருப்பை கழற்றிவிட்டார். பின்னர், “இந்த கால் செருப்பை கழற்றிவிடுடா” என்றார். மாணவரும் அமைச்சர் சொன்னதைக்கேட்டு பயந்துபோய் செருப்பை கழற்றிவிட்டார்.

கொரோனா அறிகுறியா: சென்னையில் சிகிச்சை பெறும் 2 சீனர்கள்!

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யுனிசெஃப் பிரதிநிதி தேவநேயன், “இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் வீட்டுக் குழந்தைகளை, பேரக் குழந்தைகளை செருப்பை கழற்றிவிடச் சொல்வாரா, இது அதிகார மனோபாவத்தின் உச்சமாக உள்ளது. ஒரு மாணவர் பள்ளிக்குச் செல்லாமல் அங்கு நிற்கிறார் என்றால் ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்றுதானே ஒரு அமைச்சர் கேட்க வேண்டும். அதைவிடுத்து செருப்பைக் கழற்றிவிடச் சொல்வது என்பது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

கொரோனா அறிகுறியா: சென்னையில் சிகிச்சை பெறும் 2 சீனர்கள்!

இதே போல் அமைச்சரின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அடுத்த செய்தி