ஆப்நகரம்

தமிழா! ஐபிஎல்லை நிராகரி; நிரப்ப வேண்டியது புரட்சியின் மைதானம் மட்டுமே; பாரதிராஜா!

ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 6 Apr 2018, 5:27 pm
சென்னை: ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என்று இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil Bharathiraja
இயக்குநர் பாரதிராஜா


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் பல்வேறுவிதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வரும் 7ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன.

சென்னையில் முதல் போட்டி 10ஆம் தேதி நடைபெறுகிறது. இது போராட்ட உணர்வுள்ள தமிழ் இளைஞர்களை திசை திருப்பும் என்று பல்வேறு தலைவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் இனத்தை அழித்தார்கள்; நாம் எதுவும் செய்யவில்லை. நம் மொழியை சிதைக்கிறார்கள்; நாம் மௌனமாக இருக்கிறோம்.

நம் உரிமைகள் பறிக்கப்படும் போது போராடாமல் இருக்கிறோம். நம்மை புரட்சியாளர்களாய் மாற்ற எத்தனையோ அமைப்புகள் போராடி வரும் நிலையில், ஐபிஎல் எனும் மாய உலகத்திற்கு நம்மை அடிமைப்படுத்தும் முட்டாள்தனத்திற்கு தீவைப்போம்.

தமிழா ஐபிஎல் எனும் கிரிக்கெட்டை நிராகரி. நிறைய வேண்டியது விளையாட்டு மைதான இருக்கைகள் அல்ல; புரட்சியின் மைதானம். தமிழர்களுக்கு வீர விளையாட்டும் தெரியும்.

ஐபிஎல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. கொஞ்சல் ஒத்திவையுங்கள். மீறி நடந்தால், அது ஐபிஎல் விளையாட்டாக இருக்காது.

Director Bharathiraja flags against IPL at Chennai.

அடுத்த செய்தி