ஆப்நகரம்

அனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்..!

மறைந்த தமிழக மாணவி அனிதாவுக்கு, சென்னை லயோலா கல்லூரியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் ரஞ்சித் மற்றும் திரை பிரமுகர்கள், மாணவ மாணாவியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

TNN 3 Sep 2017, 7:52 pm
மறைந்த தமிழக மாணவி அனிதாவுக்கு, சென்னை லயோலா கல்லூரியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் ரஞ்சித் மற்றும் திரை பிரமுகர்கள், மாணவ மாணாவியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
Samayam Tamil director ranjith talks for student anitha
அனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்..!


மாணவி அனிதாவின் மறைவுக்கு தமிழகம் முழுவதும் இரங்கலும், போராட்டங்களும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. காவல்துறையின் கட்டுபாடுகளையும் மீறி மாணவர்கள் நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மட்டும் சென்னையில் உள்ள பல இடங்களில் மாணாவர் அமைப்பினரும், பல்வேறு சமூக அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும், சாலை மறியல்கள் மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து மறைந்து தமிழக மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் பல சமூகநல ஆர்வலர்கள் கலந்து கொண்டு மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது,
திறமை இருந்தும், மருத்துவராவதற்கான எல்லா தகுதியும் இருந்தும் கூட இடஓதுக்கீட்டின் கீழ் படித்த மாணவியாகத் தான் ஊடகங்கள் அனிதாவை பிரதிபலித்தன. உரிமையான இட ஒதுக்கீட்டையே பிச்சை போடுவது போல் செய்து மாணவர்களை மட்டம் தட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தற்கொலை கல்விச் சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரியாக இருக்கும் நீட் தேர்வை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது அனைத்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்வியை வைத்து வியாபாரம் செய்யும் சூழ்நிலையும், அரசியல் செய்யும் சூழ்நிலையும் மாற வேண்டும் என்று இயக்குனர் ரஞ்சித் கூறினார்.

Director ranjith talks for student anitha

அடுத்த செய்தி