ஆப்நகரம்

பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கிடும் பணி: அரசு புதிய உத்தரவு!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதவில்லை என்றால், அதனை 'ஆப்சென்ட்' எனக் குறிப்பிட வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 5 Jul 2020, 4:23 pm
கொரோனா அச்சம் காரணமாக, தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் நடத்தப்படவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil school education


அத்துடன் அனைத்து மாணவர்களுக்கு ஆல் -பாஸ் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், அவர்களது வருகை பதிவேட்டின் படியும் அவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீட வேண்டும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, முதல்வரின் உத்தரவுபடி மதிப்பெண் கணக்கீடு பணிகளை அரசுத் தேர்வுகள் துறை தொடங்கியது. இதன் முதல்கட்டமாக அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்களை ஜூன் 27 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் உத்தரவிட்டிருந்தது.

10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு கொரோனா..! அரசுக்கு சிக்கல்?

ஆனால், பல பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் முறையாக ஆவணப்படுத்தப்படாததால் இந்த விவரங்களை அனுப்புவதில் சிக்கல் எழுந்தது.

அத்துடன், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதமுடியாமல் போன மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் விவரங்களை அனுப்புவது என்ற கேள்வியும் எழுந்தது.

இதையடுத்து, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

வீட்டிலிருந்தே பாடங்களை கற்க புதிய இணையதளம்: பள்ளி கல்வித்துறை அறிமுகம்

அதில், "பத்தாம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதாத மாணவர்களுக்கு, ஆப்சென்ட் எனக் குறிப்பிட்டு அவர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும். பிற மாணவர்களுக்கு பாடவாரியாக மதிப்பெண் விவரங்களை குறிப்பிட்டு அந்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கும் இதேபோன்று விவரங்களை, அரசுத் தேர்வுகள் துறை இயக்ககத்துக்கு கிடைக்கப்பெற செய்ய வேண்டும்" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி