ஆப்நகரம்

மே 4 தான் கடைசி நாள்: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 1 Apr 2022, 1:37 pm
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்தமிழ்நாட்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு, பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டது.
Samayam Tamil tn school practical exam


அந்த வகையில் 12ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஆகியவற்றுக்கு செய்முறை தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

10ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 12ஆம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

12ம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2 வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 4ம் தேதிக்குள் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது
உடனே விலையை குறைங்க: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பொதுப்பிரிவு, தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறும். அறிவியல் பாட செய்முறைத் தேர்வுகளை நடத்திமுடிக்க பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை மே 4ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி