ஆப்நகரம்

டிஸ்சார்ஜான எடப்பாடி பழனிசாமி: மருத்துவர்கள் சொன்னது என்ன?

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Samayam Tamil 20 Apr 2021, 11:41 am
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டார். இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
Samayam Tamil edappadi palanisamy


சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் எடப்பாடி. 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து 234 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சுமார் 250 இடங்களில் மக்களிடம் பேசினார்.

இந்த நம்பர் உறுதி: எடப்பாடியை நம்ப வைத்த மூன்று ரிப்போர்ட்!

இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் குடல் இறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

திமுகவுக்கு இத்தனை இடங்களா? ஐ பேக்கின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்!

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடு திரும்பினார். மேலும் மூன்று நாள்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் முதல்வர் தனது இல்லத்தில் ஓய்வில் உள்ளார்.

அடுத்த செய்தி