ஆப்நகரம்

பொள்ளாச்சி விவகாரம்: கோவை எஸ்.பி, உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் தடை

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Mar 2019, 8:26 am
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் மாணவி பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil SP


பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிறையிலுள்ள மற்ற 3 பேரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டின் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்பி மற்றும் உள்துறை செயலர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முதலில் கீழமை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி