ஆப்நகரம்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் விடுதி அறைகளுக்கு பூட்டி சீல் வைப்பு

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ விடுதிகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டன

Samayam Tamil 30 Oct 2018, 9:22 am
தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களின் சென்னை தங்கும் விடுதிகளுக்கு தமிழக அரசு சீல் வைத்து பூட்டியது.
Samayam Tamil ml-guest-house
தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் விடுதிகளுக்கு பூட்டி சீல் வைப்பு


முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர்.

இது தொடர்பான வழக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எஎல்ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. மேலும், அந்த எம்எல்ஏக்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் ரத்துசெய்துள்ளது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டி பிரத்யேக விடுதி இயங்கி வருகிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 எம்.எல்.ஏ-க்களுக்கு சொந்தமான விடுதி அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி