ஆப்நகரம்

பொங்கல் பரிசுக்கு டோக்கன் வாங்கிட்டீங்களா? முக்கிய தகவல்!

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் இன்று (டிசம்பர் 26) முதல் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 26 Dec 2020, 11:16 am
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil pongal gift token


இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா். அதேபோல் இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட உள்ளது.

2500 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்காக ரூ.5, 604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வேட்டி, சேலை திட்டத்துக்காக ரூ.484.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கில் தளர்வா, மேலும் கட்டுப்பாடா? முதல்வர் நடத்தும் ஆலோசனை!
ஜனவரி 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு 13ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கும் வீடு வீடாக இன்று (டிசம்பர் 26) முதல் டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. டிசம்பர் 30ஆம் தேதிக்குள் இந்தப் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுதாகரன் விடுதலையில் சசிகலா ஆடும் அரசியல் கேம்!

முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என டோக்கன் பிரித்து வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு பெற வேண்டிய நேரம், தேதி அதில் குறிப்பிட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி