ஆப்நகரம்

Chennai Weather: கனமழை காரணமாக புதுக்கோட்டையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: புதுக்கோட்டையில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 4 Dec 2018, 7:53 am
வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் அளித்துள்ளது.
Samayam Tamil 15


இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், துாத்துக்குடி , காரைக்கால் மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

விடிய விடிய மழை:
இதன் படி சென்னையில் புறநகர் பகுதிகளில் இரவு முழுதும் விட்டு விட்டு மழை பெய்தது. அதே போல திருவள்ளூர் மாவட்டத்தின் வடகடலேராப்பகுதி, பொன்னேரி , எண்ணூர், திருவெற்றியூர்,பெரியபாளையம், கும்மிடிபூண்டி, சிவகங்கையின் காரைக்குடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்நிலையில் புதுக்கோட்டையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கணேஷன் அறிவித்துள்ளார்.

* இதே போல நாகை மாவட்டத்தில் முகாம்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.

* இதே போல புதுச்சேரியின் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி