ஆப்நகரம்

அடேங்கப்பா... ஆறு மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Aug 2020, 6:52 pm
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தெற்கு, தென்மேற்கு மாவட்டங்ளில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
Samayam Tamil heavy rain


இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rains: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கிறதா? இதோ வானிலை ரிப்போர்ட்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், மாநகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் 13 செ.மீ. மழையும், திருச்சி மாவட்டம் முசிறியில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி