ஆப்நகரம்

சசிகலா சிறைக்கு செல்ல டிடிவிதினகரன்தான் காரணம் : திவாகரன்

சசிகலா சிறை சென்றதுக்கு, டிடிவி தினகரன்தான் காரணம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்

Samayam Tamil 26 Apr 2018, 11:57 am
சசிகலா சிறை சென்றதுக்கு, டிடிவி தினகரன்தான் காரணம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்
Samayam Tamil dinakaran-_divakaran_16046


டிடிவி தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையிலான மோதல் அப்பட்டமாக வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சசிகலா சிறைக்கு சென்றதுக்கு டிடிவிதினகரன் தான் காரணம் என்றும்,அவருக்கு துணை பொதுச்செயலாளராக பதவி கொடுத்தது தவறு என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பத்திரிக்கையாளர்களிடம் சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறுகையில், ‘’தினகரனால் கைவிடப்பட்ட அணியை மீண்டும் கையில் எடுக்கவுள்ளார். பன்னீர் செல்வம் மீது அவதூறு செய்தி பரப்பி அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியது தினகரன். ஆனால் அந்த வேலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பலிக்கவில்லை. அதேபோல என்னிடமும் பலிக்காது. டிடிவிதினகரனை நம்பிதான் கட்சியை சசிகலா அவரிடம் ஒப்படைத்தார். ஆனால் அவர் கட்சியை இல்லாமல் செய்துள்ளார்.

முதலமைச்சராகலாம் என சசிகலாவை மூளைச்சலவை செய்து ஒவ்வொருவரையும் எதிரியாக்கி விட்டு, குட்டையை குழப்பி மீன்பிடிக்க பார்த்த எண்ணம் சிலருக்கு நிறைவேறவில்லை. சதிகாரர்களின் பேச்சைக் கேட்டு சசிகலா பலிகடா ஆகிவிட்டார். மேலும் சசிகலா சிறை சென்றதுக்கு டிடிவி தினகரன்தான் காரணம்’’ என்றார்.

அடுத்த செய்தி