ஆப்நகரம்

தீபாவளி பண்டிகை: 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது

Samayam Tamil 23 Oct 2019, 4:31 pm
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil diwali special bus


தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு, வருகிற 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 10,940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், இந்த பேருந்துகள் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போ போட்றா ஊருக்கு டிக்கெட்ட... தீபாவளிக்கு 3 நாள் அரசு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

இதேபோல், தீபாவளி பண்டிகையையொட்டி, பிற ஊர்களுக்கு இடையே 8,310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. அத்துடன், தீபாவளி முடிந்த பின்பு பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு 4,627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் என கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.

பட்டாசு எப்போது வெடிக்கலாம்: டைம் நோட் பண்ணிக்கோங்க!

வேலூர், திருப்பத்தூர், ஆரணி, ஆற்காடு, ஓசூர், தர்மபுரி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது. விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதாவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deepavali Festival: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது?- நரகாசுரனின் கதை இதோ

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டுள்ள 5 சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வருகிற 24ஆம் தேதி (நாளை) முதல் வருகிற 26ஆம் தேதி வரை 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வெளியூர் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையிலும் இந்த இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி