ஆப்நகரம்

தீபாவளி பண்டிகை: டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு அசுர சாதனை!

டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே அரசு செயல்படுத்தி வருகிறது

Samayam Tamil 28 Oct 2019, 2:58 pm
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக விற்பனை செய்து தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் அசுர சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil tasmac


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்ய ஏகபோக உரிமை பெற்றுள்ளது.

பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மது போதைக்கு அடிமையாக்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வந்தாலும், அந்நிறுவனத்தை வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாகவே அரசு செயல்படுத்தி வருகிறது.

அடுத்து வருது கள் இறக்கும் போராட்டம்!

குறிப்பாக புத்தாண்டு, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் குடிபிரியர்களின் கூட்டம் டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், அரசு இயந்திரம் அதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

அதன்படி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.385 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை இந்த மூன்று நாட்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

குத்து விளக்கேற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை செவ்வாய்கிழமை வந்தது. இதனால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் மற்றும் தீபாவளி நாள் என மொத்தம் 4 நாட்கள் கொண்டாட்ட நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ரூ.325 கோடிக்கு மது பானங்கள் விற்கப்பட்டது.

ஆனால், நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையானது அரசு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வந்ததாலும், திங்கள் கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்ட போதும், வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் மட்டுமே கொண்டாட்ட நாட்களாக குறைவாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆண்டை விட ஜவுளி, நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட விற்பனைகள் குறைவாகவே நடந்ததாக கூறப்பட்டதால் அதன் தாக்கம் மது விற்பனையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

‘தீபாவளிக்கு சரக்கு டார்கெட் ரூ. 360 கோடிலாம் கிடையாது’: தமிழ்நாடு அமைச்சர்!

இருப்பினும், அதற்கு நேர்மாறாக தீபாவளி பண்டிகையையொட்டி நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாகவும், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை விட அதிகமாகவும் மது விற்பனை செய்து தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் அசுர சாதனை படைத்துள்ளது.

கடந்த 25ஆம் தேதியன்று ரூ.100 கோடி, கடந்த 26ஆம் தேதியன்று ரூ.183 கோடி, தீபாவளி நாளான 27ஆம் தேதியன்று (நேற்று) ரூ.172 கோடி என ஆகமொத்தம் ரூ.455 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி